Recent News

Recent Circulars

29-07-2011 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் ஆசிரியர் / அலுவலர்களின் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசே!

புதிய பென்ன் மசோதாவைத் திரும்பப் பெறு.

மாநிலங்களுக்கு UGC ஊதிய விகிதங்கள் அமல்படுத்த 80% நிதியை உடனே வழங்கிடு.

UGC ஊதிய முரண்பாடுகளை கலைந்திடு.

AIFUCTO பரிந்துரைத்தபடி UGC regulations-இல் உரிய மாற்றங்கள் செய்திடு.

உயர்கல்வியில் நவீன தாராளமயக் கொள்கைகளை திணிப்பதை நிறுத்திடு.

தமிழக அரசே!

ஆசிரியர்/அலுவலர் காலிப் பணியிடங்களை உடனே நிரப்பிடு.

மதுரை காமராசர், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா மற்றும் அழகப்பா பல்கலைக்கழகங்களில் கடந்த 5 ஆண்டுகளில் செய்யப்பட்ட ஆசிரியர்/அலுவலர் நியமனம், மாணவர் சேர்க்கை, கல்லூரிகளுக்கு அனுமதி (affiliation), தொலைநெறிக் கல்வி மற்றும் பிற துறைகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்திடு.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்/அலுவலர்களின் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்


நாள்: 29-07-2011 நேரம்: மாலை 4 மணி

இடம்: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகம், திருநெல்வேலி-12


ஆசிரியர்கள்/அலுவலர்கள் ஓரணியாய் திரள்வோம்!

பல்கலைக்கழகங்களில் முறைகேடுகளுக்கு முடிவு கட்டுவோம்!!


இவண்

JAC-TANTSAC

 



Back