Recent News

Recent Circulars

ஜேஏசி-டான்சாக் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 07-09-2013 அன்று மாலை 3 மணியளவில் வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் தர்ணா!

தற்போது நடைமுறையிலுள்ள விதிமுறைகளின்படி 01.01.2006க்குப் பின்னர் பணியில் சேர்ந்தோருக்கு பணி மேம்பாடு வழங்கிட வேண்டும், தேர்வுநிலை விரிவுரையாளராக ஐந்து ஆண்டுகள் பணி முடித்தோருக்கு ரூ14,940 அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்து 01.01.1996 முதல் பணி மேம்பாடு வழங்கிட வேண்டும், பி.எச்.டி முடித்தோருக்கான ஊக்க ஊதிய உயர்வினை 01.09.2008 முதல் வழங்கி வருவதை மாற்றி 01.01.2006 முதல் வழங்கிட வேண்டும், 01.01.2006 முதல் 31.12.2006 வரையிலான ஓராண்டு காலத்திற்கான ஊதிய நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்கிட வேண்டும், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும், கல்லூரிகளிலுள்ள அனைத்து ஆசிரியர், நூலகர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் அலுவலர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை பல்கலைக்கழகமானியக்குழுவின் பரிந்துரைப்படி 65ஆக உயர்த்திட வேண்டும், அனைத்து ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு பணிப்பாதுகாப்பு ஆணையினை வழங்கிடவேண்டும், அனைத்து சுயநிதி, பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் பொருந்தும்படி தனியார் கல்லூரி ஒழுங்காற்றுச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்திட வேண்டும், சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான கட்டணங்களை நிர்ணயம் செய்திட குழு ஒன்றினை அமைத்திட வேண்டும், கல்விப் பணி தடையின்றி நடந்திட அலுவலர்கள் ஓய்வுபெறும் காலத்தினை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளதைப் போன்று கல்வியாண்டின் இறுதி நாளான மே 31 வரை நீட்டித்து பணி நீட்டிப்பிற்கான அரசாணையினை பிறப்பிக்க வேண்டும், 2013 பிப் 20,21 அகில இந்திய வேலை நிறுத்த நாட்களை வரன்முறை செய்து அந்த நாட்களுக்கு ஊதியம் வழங்கிட வேண்டும்,  பாரதிதாசன், பாரதியார், மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற மோசடிகள் மற்றும் நிர்வாக குளறுபடிகள் குறித்து ஊழல் கண்காணிப்புத் துறையினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் மீது நடவடிக்கை எடுத்திடவும், பெரியார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றுள்ள நிதி மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து நடவடிக்கை எடுத்திட விசாரணைக்குழு அமைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற ஜே..சி டான்சாக் பொதுக்கோரிக்கைகள் மற்றும் அனைத்து சங்கங்களுக்கான பிரத்தியேக கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தி வருகின்ற செப்டம்பர் மாதம் 7 சனிக்கிழமையன்று மாலை 3 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் தர்ணா போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..

கிளைகளிலிருந்து திரளாக உறுப்பினர்கள் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை கிளைச் செயலாளர்கள் செய்திட வேண்டும்..

போராடாமல் பெற்றதில்லை! போராட்டங்கள் தோற்றதில்லை!!

வாருங்கள் தோழர்களே!

ஒன்றுபட்ட பதாகையின் கீழ் சென்னையில் கூடுவோம்!

வென்றிடுவோம் நீண்ட நாள் கோரிக்கைகளை!!

ஒன்றுபட்ட போராட்டம் வென்று காட்டும் நிச்சயம்.



Back